செய்திகள்
அத்திவரதர் விஐபி தரிசன வழியில் மின்கசிவு -பக்தர்கள் பதட்டம்
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசன வழியில் இன்று ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக பக்தர்கள் பதட்டம் அடைந்தனர். சிலர் காயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கிய அத்தி வரதர் வைபவம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முடியவுள்ளது. இதனையடுத்து நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, கட்டுக்கடங்காத கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்கும் விஐபி தரிசன வழியில் இன்று திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பதட்டம் அடைந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இப்போது சரி செய்யப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கிய அத்தி வரதர் வைபவம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முடியவுள்ளது. இதனையடுத்து நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, கட்டுக்கடங்காத கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அத்தி வரதரை இனி தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம் எனவும், தங்கி இருக்கும் அளவுக்கு தயாராக பக்தர்கள் வர வேண்டும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்கும் விஐபி தரிசன வழியில் இன்று திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பதட்டம் அடைந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இப்போது சரி செய்யப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.