செய்திகள்
மரணம்

மயிலாடுதுறை அருகே இளம்பெண் மர்ம மரணம் - போலீசில் தந்தை புகார்

Published On 2019-08-05 11:33 GMT   |   Update On 2019-08-05 11:33 GMT
மயிலாடுதுறை அருகே திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அம்பிகா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 4 மாத குழந்தை உள்ளது. ஏற்கனவே அம்பிகாவுக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் 2-வதாக முருகனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அம்பிகாவின் தந்தை ராமமூர்த்திக்கு முருகன் போன் செய்தார். அதில் உங்கள் மகள் அம்பிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி மற்றும் உறவினர்கள் மல்லியம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

மகளின் சாவில் அவருக்கு சந்தேகம் இருந்தது. இது குறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் என் மகள் அம்பிகாவின் கழுத்தில் காயம் இருக்கிறது என்றும், அவளது சாவில் மர்மம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆன நிலையில் அம்பிகா இறந்தது பற்றி ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News