செய்திகள்
வேதாரண்யத்தில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்
வேதாரண்யத்தில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி பகுதி கனக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். விவசாயி. இவரது மகன் புஷ்பராஜ்(வயது26). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியபோது சேதுரஸ்தா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.