வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காவல்சரகம் சந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது49). இவரது மனைவி சத்யவாணி(40). இவர்களிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த மாதம் 29-ந்தேதி அவர்களிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் ஆத்திரத்தில் ரவிக்குமார் மனைவி சத்யவாணியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சத்யவாணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து அவரது தாய் நாகம்மாள் தலைஞாயிறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ், கொலை வழக்காக ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.