செய்திகள்
லாரி மோதி வாலிபர் பலி

மீன் வாங்க வந்த வாலிபர் லாரி மோதி பலி

Published On 2019-07-20 17:58 GMT   |   Update On 2019-07-20 17:58 GMT
பேராவூரணி அருகே மீன் வாங்க வந்த வாலிபர் லாரி மோதி பலியானார்.
மணமேல்குடி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவி கரம்பை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது 32). இவர் நேற்று காலை மீன் வாங்குவதற்காக கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வந்து கொண்டிருந்தார். மீன் மார்க்கெட் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நீலகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News