செய்திகள்
நாகை அருகே 2 வீடுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த பாப்பா கோவில் அருகே 50-க்கும் மேற்பட்டவர்கள் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள மதியழகன் வீட்டிற்கும் பரவியது.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் 2 வீடுகளிலும் இருந்த துணிகள், மின்விசிறி உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுபற்றி நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.