செய்திகள்
விபத்து

சத்துவாச்சாரியில் கார் மோதி பெண் பலி

Published On 2019-07-08 15:44 IST   |   Update On 2019-07-08 15:44:00 IST
வேலூர் சத்துவாச்சாரியில் கார் மோதி பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சாந்தி (49). சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அருகே சிறிய ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை ஓட்டலுக்கு செல்வதற்காக சாந்தி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாந்தி சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

சத்துவாச்சாரி போலீசார் உடலை கைபற்றி அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News