செய்திகள்
வேலூரில் ஆட்டோ டிரைவர் வீட்டில் தீ விபத்து
வேலூர் சார்ப்பனா மேட்டில் ஆட்டோ டிரைவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் சார்ப்பனாமேடு கலாஸ் பாககுண்டா தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு புகை வெளியானது. சிறிது நேரத்தில் தீ அறையின் முழுவதும் பரவியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் சார்ப்பனாமேடு கலாஸ் பாககுண்டா தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு புகை வெளியானது. சிறிது நேரத்தில் தீ அறையின் முழுவதும் பரவியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.