செய்திகள்
விபத்து

நாட்டறம்பள்ளி அருகே வாகனம் மோதி வியாபாரி பலி

Published On 2019-07-05 11:10 GMT   |   Update On 2019-07-05 11:10 GMT
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பொறி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாட்டறம்பள்ளி:

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் லட்சுமணன். பொறி வியாபாரி. இவர் வியாபாரத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளிக்கு வந்தார்.

வியாபாரத்தை முடித்து விட்டு இரவு ஓய்வு எடுப்பதற்காக நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரத்தில் கிருஷ்ணகிரி-வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டீ கடை அருகே படுத்திருந்தார். இரவு தூங்கி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமணன் மீது ஏறியது.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை லட்சுமணன் இறந்தார். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News