செய்திகள்
காட்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 7 பவுன் செயின் பறிப்பு
காட்பாடியில் இன்று காலை சப்-இன்ஸபெக்டர் மனைவியிடம் 7 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
வேலூர் அரியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி கலாராணி (52).
இன்று காலை காட்பாடி பவானி நகரில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். இதை கண்காணித்த 2 கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் கலாராணியை பின் தொடர்ந்தனர். திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதனால் பதற்றம் அடைந்த கலாராணி கத்தி கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடிவருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து கலாராணி காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வேலூர் அரியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி கலாராணி (52).
இன்று காலை காட்பாடி பவானி நகரில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். இதை கண்காணித்த 2 கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் கலாராணியை பின் தொடர்ந்தனர். திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதனால் பதற்றம் அடைந்த கலாராணி கத்தி கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடிவருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து கலாராணி காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.