செய்திகள்
வேலூர் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை
வேலூர் அருகே அண்டா தண்ணீரில் மூழ்கடித்து 7 மாத குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அருகே அண்டா தண்ணீரில் மூழ்கடித்து 7 மாத குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அப்துல்லாபுரம் அருகே உள்ள சத்தியமங்கலம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த ரவி மகள் பவித்ரா (வயது 21). இவருக்கும் ஆற்காடு மேலகுப்பத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சுரேசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பவித்ரா பிரசவத்திற்காக சத்தியமங்கலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஷ்வா என பெயரிட்டனர். 7 மாத கை குழந்தையான விஷ்வாவை பவித்ரா பாசத்துடன் வளர்த்து வந்தார்.
உத்தரபிரதேசத்தில் இருந்த கணவருடன் போனில் பேசி வந்தார். அவரும் குழந்தையின் மழலை சத்தத்தை போனில் கேட்டு மகிழ்ச்சியில் இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
தாய் வீட்டில் இருந்த மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா வாழ்வதை விட சாவதே மேல் என கருதினார். வீட்டில் இருந்த அண்டாவில் இருந்த தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்தார். மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. பின்னர் பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பவித்ரா மற்றும் குழந்தை வீட்டில் பிணமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 1½ ஆண்டே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.