செய்திகள்
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

சீர்காழி அருகே வீட்டின் பீரோவை உடைத்து ரூ.2 லட்சம்-5 பவுன் கொள்ளை

Published On 2019-07-01 15:04 IST   |   Update On 2019-07-01 15:04:00 IST
சீர்காழி அருகே வீட்டின் பீரோவை உடைத்து ரூ.2 லட்சம்-5 பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கடவாசல் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 56). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் மேல்மருவத்தூருக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மாரியப்பன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், மற்றும் 5 பவுன் நகை , வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.

பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் பணம், நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி புதுப்பட்டினம் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

Similar News