செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே வெளிமாநிலத்திற்கு ரெயிலில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே வெளிமாநிலத்திற்கு ரெயிலில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி:
வெளிமாநிலத்திற்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் உமாரம்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான வருவாய் துறையினர் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது ரெயில் நிலையம் அருகே முள்புதற்களில் சுமார் 70 மூட்டைகளில் 800 கிலோ ரேசன் பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பின்னர் பறிமுதல் செய்த ரேசன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.