செய்திகள்

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Published On 2019-06-19 13:40 GMT   |   Update On 2019-06-19 13:40 GMT
ஆலங்குடி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணவால்குடி பகுதியில் ஆண்டிக்குளம் உள்ளது. இந்த குளத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து தாமரை பூக்களை பறித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பூக்களை பறிக்க சென்றார். அப்போது குளத்தில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவர் பிணமாக மிதந்தார். 

இதுகுறித்து  தகவல் அறிந்ததும் ஆலங்குடிபோலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று பிணத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்து  கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறார்கள்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள காத்தான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 76). விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு நேற்று முன்தினம் தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்த  போது அங்கு சின்னையா மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல்அறிந் ததும் ஆலங்குடி  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னையா  உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக் காக புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News