செய்திகள்

செருப்பை எடுக்க இறங்கியபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2019-06-17 12:31 GMT   |   Update On 2019-06-17 12:31 GMT
மாமல்லபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த செருப்பை எடுக்க இறங்கியபோது வாலிபர் தவறி விழுந்து தண்ணீர் மூழ்கி பலியானார்.
மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரை சேர்ந்தவவர் வெங்கடேசன் (வயது 28). தொழிலாளி.

இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் மேல் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது ஒரு செருப்பு கழன்று கிணற்றுக்குள் விழுந்தது.

இதையடுத்து வெங்கடேசன் கிணற்றுக்குள் இறங்கி செருப்பை எடுக்க முயன்றார். இதில் அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய வெங்கடேசனை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரி சோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News