செய்திகள்
கறம்பக்குடி அருகே பைக்-லாரி மோதல்: வாலிபர் பலி
கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு தெருவை சேர்ந்த தங்கராசு மகன் மனோஜ் (வயது 20). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் விடுமுறையில் மனோஜ் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அதே பகுதி சடையன்தெரு சாலையில் மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்றார். அப்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.