செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

மெரினா சாலையில் பைக் ரேஸ்- 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2019-05-29 09:56 GMT   |   Update On 2019-05-29 09:56 GMT
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
ராயபுரம்:

சென்னை மெரினா கடற்கரை சாலை மற்றும் ஈ.சி.ஆர். சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ‘பைக்ரேஸ்’ நடந்து வருகிறது.

இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பைக்ரேசில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் சிக்கி உள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் சீறிப்பாய்ந்தன. அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News