செய்திகள்
தனியார் ஆஸ்பத்திரியில் நர்சை தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரியில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகர் தர்மராஜா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கவிபாரதி (வயது19). இவர் கிருஷ்ணகிரி பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த 24-ந்தேதிஅன்று கவிபாரதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல் என்பவர் கவிபாரதியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி கவிபாரதியை சரமாரியாக சக்திவேல் தாக்கினார்.
இது குறித்து கவிபாரதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கியதாக சக்திவேலை கைது செய்தனர்.