செய்திகள்

பட்டாபிராமில் கிணற்றில் மூழ்கி பலியான மாணவன் உடல் மீட்பு

Published On 2019-05-26 11:29 GMT   |   Update On 2019-05-26 11:29 GMT
ஆவடியை அடுத்த பட்டாபிராமில் கிணற்றில் மூழ்கி பலியான மாணவன் உடல் மீட்கப்பட்டது. இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபி (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.

நேற்று மதியம் அவர் நண்பர்கள் 5 பேருடன் பாலவீடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். முதலில் கோபி கிணற்றுக்குள் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுபற்றி அவர்கள் கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் கோபியை மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். நள்ளிரவில் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் கோபியை பிணமாக மீட்டனர். இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து பட்டாபிராம் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News