செய்திகள்

திருவையாறு அருகே இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்

Published On 2019-05-23 10:32 GMT   |   Update On 2019-05-23 10:32 GMT
திருவையாறு அருகே இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவர் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்பட்டு நடுக்காவேரி மெயின்ரோட்டில் வரும்போது வெடி வெடிப்பதில் தகராறு ஏற்பட்டு அதே ஊரை சேர்ந்தவர்கள் 2 கோஷ்டியாக மோதி கொண்டனர்.

இது சம்மந்தமாக நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் மகன் திலீபன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அதே ஊரை சேர்ந்த செந்தில், சிலம்பரசன், சுப்பிரமணியன், கிஷோர், கார்த்திகேயன், ஆகிய 5 மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் இதே போல் மொட்டையாண்டி மகன் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ், புதியவன், திலீபன்ராஜ், ராஜபாண்டி, சூர்யா ஆகிய 5 பேர் மீதும் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News