செய்திகள்

ஆவடியில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-05-22 08:23 GMT   |   Update On 2019-05-22 08:23 GMT
ஆவடியில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி:

ஆவடி வசந்தம் நகரில் யமுனை தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (32). சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆக பணிபுரிகிறார்.

கடந்த வாரம் தனது சொந்த ஊரான ஊட்டிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறையில் இருந்த பீரோவை பார்த்தார்.

அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

Similar News