செய்திகள்

வேப்பேரியில் 5 கொள்ளையர்கள் கைது

Published On 2019-05-18 08:26 GMT   |   Update On 2019-05-18 08:26 GMT
வேப்பேரியில் 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை வேப்பேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

இது தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பிரேம்குமார், அஜித்குமார், சாமுவேல் ஆகிய 3 பேரும் இவர்களது கூட்டாளிகள் இருவரும் சிக்கினர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் சேர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், மோட்டார் சைக்கிள்களை திருடி இருப்பதும் தெரிய வந்தது.

திருடிய செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் கொள்ளையர்கள் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருட்டு மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News