செய்திகள்

கம்பத்தில் காதல் தோல்வியால் தொழிலாளி தற்கொலை

Published On 2019-05-15 16:46 IST   |   Update On 2019-05-15 16:46:00 IST
கம்பத்தில் காதல் தோல்வியால் மில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் வினோத்குமார்(வயது21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலைசெய்த பெண்ணுடன் நட்பாக பழகி அவரது வீட்டாரிடம் பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, வினோத்குமார் வேலையிலிருந்து விலகி கம்பத்திற்கு வந்து விட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த அவர் குடும்பத்தில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். பின்னர் இரண்டு நாட்களுக்கு முன் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. இந்நிலையில் நேற்று நந்தனார் காலனி மேற்கு புறத்தில் தோப்பில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News