செய்திகள்

நெசப்பாக்கத்தில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது - டிரைவர் தப்பினார்

Published On 2019-05-14 07:17 GMT   |   Update On 2019-05-14 07:17 GMT
நெசப்பாக்கத்தில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

எண்ணூர் தாழம்குப்பம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகணேஷ். ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சவாரி ஏற்றிக்கொண்டு ராமாபுரம் வந்தார்.

பின்னர் அவர் திரும்பி சென்று கொண்டு இருந்தார்.நெசப்பாக்கம் ஏரிக்கரை சர்வீஸ் சாலையில் வந்த போது தீடீரென ஸ்ரீகணேஷ் அமர்ந்து இருந்த இருக்கையின் கீழ் பகுதியில் இருந்து கரும் புகை கிளம்பியது.

உடனடியாக ஸ்ரீகணேஷ் ஆட்டோவை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் ஆட்டோ மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும் எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அசோக் நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது.

ஆட்டோ தீப்பிடித்ததும் இறங்கியதில் அதிர்ஷ்ட வசமாக ஸ்ரீகணேஷ் உயிர் தப்பினார். பேட்டரி வெடித்து அதில் ஏற்பட்ட மின் கசிவால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News