செய்திகள்

அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2019-05-13 13:24 IST   |   Update On 2019-05-13 13:24:00 IST
எனது அறையில் நடந்த சோதனை பாரபட்சமானது. அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் தங்கி இருந்த விடுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-


நான் இல்லாத நேரத்தில் எனது அறையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது மிகவும் பாரபட்சமானது. திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் லாட்ஜூகளில் தங்கி உள்ளனர். அவர்களின் அறைகளில் ஏன் சோதனை நடத்தவில்லை.

காவல்துறை வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது. எனவே அந்த வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News