செய்திகள்

போச்சம்பள்ளி அருகே இளம்பெண் மாயம்

Published On 2019-05-09 13:25 GMT   |   Update On 2019-05-09 13:25 GMT
போச்சம்பள்ளி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி அடுத்துள்ள அரசம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது47). இவரது மகள் சங்கீதா (22). மயிலம்பட்டியை சேர்ந்த சிலம்பரசனுக்கும், சங்கீதாவுக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் மயிலம்படியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால்  சங்கீதா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விடுவார். பின்னர் அவர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்.

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்து கொண்டு சங்கீதா தனது தந்தை வீட்டிற்கு சென்றார். அங்கு தந்தை வீட்டில் இருந்து சங்கீதா போச்சம்பள்ளி சிப்காட் தனியார் கம்பெனிக்கு வேலை சென்று வந்தார். 

கடந்த 6-ந்தேதி அன்று சங்கீதா வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தந்தை பழனி உறவினர் வீடு உள்பட பல்வேறு  இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இது குறித்து பழனி பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News