செய்திகள்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆயுள் தண்டனை கைதி பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
கோவை:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள சானைபட்டியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 84). இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகப்பனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவரை ஜெயில் அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள சானைபட்டியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 84). இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகப்பனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவரை ஜெயில் அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.