செய்திகள்

வேதாரண்யம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2019-05-03 16:56 IST   |   Update On 2019-05-03 16:56:00 IST
வேதாரண்யம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அருண் (வயது 35) இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று அருணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த அருண் தனது வீட்டை விட்டு வெளியே வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல்கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News