செய்திகள்

கே.கே.நகர் அருகே பெண் தொழிலாளி தற்கொலை

Published On 2019-04-29 09:12 GMT   |   Update On 2019-04-29 09:12 GMT
கே.கே.நகர் அருகே பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கே.கே. நகர், அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வசந்தி (வயது50).மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் தவித்து வந்த வசந்தி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நேற்று மாலை அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News