செய்திகள்

கும்பகோணம் அருகே இளம்பெண் மாயம்

Published On 2019-04-27 11:39 GMT   |   Update On 2019-04-27 11:39 GMT
கும்பகோணம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே முத்தையாபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி (வயது 40). சுமதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 25-ம் தேதி இவரது மகள் ரூபா (வயது 25). தனது தாய் சுமதியை ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டு ஊருக்கு போகிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை ரூபா வீட்டுக்கு செல்லவில்லை.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News