செய்திகள்
கோபி அருகே விவசாயி வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
கோபி அருகே விவசாயி வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 48) விவசாயி, கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
பீரோவில் இருந்த 2பவுன் நகை பணம் 2 ஆயிரம் மற்றும் ஒரு கம்ப்பூட்டர் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து உள்ளனர்.
வீடு பூட்டி கிடப்பதை கண்டு நோட்ட மிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.