செய்திகள்

கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற கும்பல் கைது

Published On 2019-04-16 11:07 GMT   |   Update On 2019-04-16 11:07 GMT
கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் புது பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது பஸ்நிலையம் பின்புறம் ஒரு சாக்கு பையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் 4-வது வார்டு சுக்காங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 38) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 23 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த உலகமாயன் (வயது 50) என்பவரிடம் இருந்து 39 மது பாட்டில்களையும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பேச்சி (வயது 52) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

Tags:    

Similar News