செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல் - திமுக பிரமுகரின் மகன் உடல் நசுங்கி பலி

Published On 2019-04-15 12:15 GMT   |   Update On 2019-04-15 12:15 GMT
வத்தலக்குண்டு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தி.மு.க. பிரமுகரின் மகன் உடல் நசுங்கி பலியானார்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு காந்திநகர் ராஜாஜி தெருவை சேந்தவர் சன்னாசி. இவர் தி.மு.க. பிரமுகர். இவரது மகன் வாசிமலை (வயது31). வெங்கிடாஸ்திரி கோட்டையில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருணம் ஆகி நிவேதா (23) என்ற மனைவியும் வருண் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று இரவு ஓட்டல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். ஆ பிரிவு என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.குரும்பபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வாசிமலை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ராமமூர்த்தி மற்றும் முருகன் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் அங்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News