செய்திகள்

செங்கோட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2019-04-15 07:32 GMT   |   Update On 2019-04-15 07:32 GMT
செங்கோட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை காலசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜ்(வயது38). கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கினார். காற்றுக்காக மின்விசிறியை கட்டிலில் வைத்திருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை யாரும் கவனிக்க வில்லை. இதனிடையே காலையில் வெங்கட்ராஜ் கட்டில் அருகே இறந்து கிடந்ததை பார்த்து அவரது வீட்டினர் கதறி அழுதனர். இதுபற்றி செங்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News