செய்திகள்

நாகூர் அருகே வேன் மோதி வாலிபர் பலி

Published On 2019-04-14 12:20 GMT   |   Update On 2019-04-14 12:20 GMT
நாகூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகூரை அடுத்த சன்னாமங்களம் காரைமேடு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் கவியரசன் (வயது 17) இவர் நேற்று இரவு நாகூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகூர் தேரடி மெயின் ரோட்டில் லோடு வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த நாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதை வழக்கு பதிவு செய்து போலீசார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News