செய்திகள்

கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் பலி

Published On 2019-04-10 10:01 GMT   |   Update On 2019-04-10 10:01 GMT
கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(வயது 6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவன் சக்திவேல் பின்னர் விளையாட சென்றான். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான 10 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுவன் கிடந்துள்ளான். விளையாடி கொண்டிருந்த போது சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். இதனையடுத்து அவனது பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News