செய்திகள்

ராணிப்பேட்டை அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2019-04-08 11:39 GMT   |   Update On 2019-04-08 11:39 GMT
ராணிப்பேட்டை அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா:

ராணிப்பேட்டை மாஹவீர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலீல் (வயது 52) பிஸ்கெட் வியாபாரி. இவர் நேற்று இரவு வேலூரில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வந்திருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இன்று காலை வீட்டிற்கு திரும்பிய கலீல் வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கலீல் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News