செய்திகள்
மதுராந்தகம் அருகே கார் கவிழ்ந்து 2 பேர் பலி
மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மதுராந்தகம்:
திண்டிவனத்தை சேர்ந்தவர் குமரன். இவர் தனது நண்பருடன் காரில் இன்று காலை சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று கார் மீது திடீரென மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இதில் குமரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து உருண்டது.
இதில் காரில் இருந்த குமரன் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்து 2 பேர் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
குமரன் எதற்காக சென்னை வந்தார் என்பதும் அவருடன் பயணித்த நண்பரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் குமரன். இவர் தனது நண்பருடன் காரில் இன்று காலை சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று கார் மீது திடீரென மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இதில் குமரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து உருண்டது.
இதில் காரில் இருந்த குமரன் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்து 2 பேர் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
குமரன் எதற்காக சென்னை வந்தார் என்பதும் அவருடன் பயணித்த நண்பரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.