செய்திகள்
புளியந்தோப்பில் வீடு இடிந்து தாய்-மகள் உயிரிழப்பு
புளியந்தோப்பில் வீடு இடிந்து தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பூர்:
புளியந்தோப்பு கன்னிகாபுரம் நியூ காலனியில் காசியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வெங்கடேசன் (வயது 32). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு இவர் தனது மனைவி சஞ்சிதா (28), மகள் யுவஸ்ரீ (7), மகன் கிருஷ்ணகுமார் (3) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சஞ்சிதா, யுவஸ்ரீ ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த வெங்கடேசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.
புளியந்தோப்பு கன்னிகாபுரம் நியூ காலனியில் காசியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வெங்கடேசன் (வயது 32). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு இவர் தனது மனைவி சஞ்சிதா (28), மகள் யுவஸ்ரீ (7), மகன் கிருஷ்ணகுமார் (3) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சஞ்சிதா, யுவஸ்ரீ ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த வெங்கடேசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.