செய்திகள்

அறந்தாங்கி உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

Published On 2019-04-01 18:52 IST   |   Update On 2019-04-01 18:52:00 IST
அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள இரவு உணவு விடுதிகள், தள்ளுவண்டி கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அறந்தாங்கி:

அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள இரவு உணவு விடுதிகள், தள்ளுவண்டி கடைகளில் சாம்பார் மற்றும் சட்னி பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் சுகாதார ஆய்வாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஆத்மநாதன், ஆசைத்தம்பி, மெய்யநாதன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் அனைத்து இரவு உணவு விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் தடை செய்யப்பட்ட 50 கிலோ சாம்பார் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  ரூ.7500 அபராதம் விதிக்கப்பட்டது .  தொடர்ந்து இதுபோல் சட்னி, சாம்பார்  கவர்களில் வைத்து விற்பனை செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News