செய்திகள்

கோவை சிறுமியின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்

Published On 2019-03-29 10:45 GMT   |   Update On 2019-03-29 10:45 GMT
கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். #KamalHaasan #GirlHarassment
கோவை:

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

தென் சென்னை பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்த அவர் இன்று மத்திய சென்னை மற்றும் வட சென்னை பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது 2 நாட்களாக கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்த கமல் விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு இருந்து துடியலூர் சென்ற கமல், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,  ‘வீட்டின் அருகே 20 அடி தள்ளி குழந்தைகள் விளையாடக் கூடிய சூழல் இல்லாவிடில் நல்ல தமிழகமாக இருக்காது. சிறுமி வழக்கில் காவல்துறை தன் கடமையைச் செய்யும் என நம்புகிறேன்’ என்றார். #KamalHaasan #GirlHarassment
Tags:    

Similar News