செய்திகள்
குன்றத்தூர் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
குன்றத்தூர் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood
பூந்தமல்லி:
ஆந்திராவில் இருந்து கடந்த 19-ந் தேதி சென்னை துறைமுகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.
தகுந்த ஆவணங்கள் இல்லாததால் அந்த கண்டெய்னர் லாரி திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அதில் செம்மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த லாரி எங்கு சென்றது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையில் அந்த லாரி சென்றது தெரியவந்தது. 3 நாட்களாக தேடியும் அந்த லாரி சிக்கவில்லை.
போலீஸ் விசாரணையில், தண்டலம் அருகே கீழ்மாநகர் பகுதிக்கு லாரி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள ஒரு குடோனில் 5 டன் செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 3 கோடி. இந்த செம்மரக்கட்டைகள் இருந்த குடோனை வளசரவாக்கத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.
அவருக்கு இதில் தொடர்பு உண்டா? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood
ஆந்திராவில் இருந்து கடந்த 19-ந் தேதி சென்னை துறைமுகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.
தகுந்த ஆவணங்கள் இல்லாததால் அந்த கண்டெய்னர் லாரி திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அதில் செம்மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த லாரி எங்கு சென்றது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையில் அந்த லாரி சென்றது தெரியவந்தது. 3 நாட்களாக தேடியும் அந்த லாரி சிக்கவில்லை.
போலீஸ் விசாரணையில், தண்டலம் அருகே கீழ்மாநகர் பகுதிக்கு லாரி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள ஒரு குடோனில் 5 டன் செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 3 கோடி. இந்த செம்மரக்கட்டைகள் இருந்த குடோனை வளசரவாக்கத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.
அவருக்கு இதில் தொடர்பு உண்டா? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood