செய்திகள்

செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2019-03-27 14:40 GMT   |   Update On 2019-03-27 14:40 GMT
சாத்தான்குளம் அருகே செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:

நாங்குநேரி அருகே உள்ள கீழசிந்தாமணி மேல தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் அண்டோ லிவின் (வயது 18). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். 

இதில் மனமுடைந்த அண்டோ லிவின் பேய்குளத்தில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News