செய்திகள்

ரெயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2019-03-27 10:48 GMT   |   Update On 2019-03-27 10:48 GMT
ரெயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தக்கோலம்:

அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சென்னை - திருப்பதி எக்ஸ்பிரஸ், அரக்கோணம்- திருப்பதி ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயணிகளின் சீட்டுக்கு அடியிலும், கழிவறைகளில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம், வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News