செய்திகள்

கருங்கல்பாளையத்தில் வி‌ஷம் குடித்து வாலிபர் பலி

Published On 2019-03-26 13:15 GMT   |   Update On 2019-03-26 13:15 GMT
கருங்கல்பாளையத்தில் திருமணமாகத ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணி புரிந்து வந்தார்.

கடந்த 24-ந் தேதி வீட்டில் வந்து படுத்தவர் அங்கேயே இறந்து கிடந்தார் அவர் வி‌ஷம் குடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை அரசு ஆஸ்த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்தாரா? என்று கருங்கல் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News