செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளியை வெட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது

Published On 2019-03-26 09:23 GMT   |   Update On 2019-03-26 09:23 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளியை வெட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு பூ மார்கெட்டில் தங்கி வேலை செய்து வருபவர் முருகன் (48). நேற்று மாலை அவர் பூ மார்கெட்டில் உள்ள கடைக்கு வந்து கொண்டிருந்தார் அப்போது முருகனை வழிமறித்த வாலிபர் பணம் கேட்டு மிரட்டினர். திடீரெனஅவன் முருகனை கத்தியால் வெட்டி பையில் இருந்த பணத்தை பறித்து தப்பி சென்றுவிட்டான்.

கையில் வெட்டு காயமடைந்த முருகன் இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்

இதில் வழிப்பறியில் ஈடுபட்டது நெற்குன்றம் சீமாத்தம்மன் நகர் 2வது செக்டாரைச் சேர்ந்த சரண் என்பது தெரிந்தது. மதுரவாயலில் பதுங்கி இருந்த சரணை நேற்று இரவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கைதான சரண் ஏற்கனவே கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் , மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News