செய்திகள்

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

Published On 2019-03-26 02:16 GMT   |   Update On 2019-03-26 02:16 GMT
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. #TamilnaduFisherman
ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்ததுடன், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளை சேர்ந்த மீனவர்கள் 11 பேரை கைது செய்தது.



கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். #TamilnaduFisherman #SrilankanNavy

Tags:    

Similar News