செய்திகள்

அனுமதியின்றி சுவர் விளம்பரம் - 25 வழக்குகள் பதிவு

Published On 2019-03-25 07:43 GMT   |   Update On 2019-03-25 07:43 GMT
தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019
தர்மபுரி:

அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தீர்த்த மலை, கொண்டரம்பட்டி, லாசனம்பட்டி, மாம்பட்டி ஆகிய இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் சுவர்களில் தேர்தல் சின்னங்களை எழுதிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.  #LokSabhaElections2019


Tags:    

Similar News