செய்திகள்

விருதுநகரில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

Published On 2019-03-24 14:05 GMT   |   Update On 2019-03-24 14:05 GMT
விருதுநகரில் குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்தார்.

விருதுநகர்:

விருதுநகர் அல்லம்பட்டி பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 55).

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வாக்குவாதம், சண்டை சச்சரவு ஏற்பட்டது.

இந்த நிலையில் விருதுநகர் கவுசிகாமாநதி ரெயில்வே பாலம் அருகே வந்த சுப்புலட்சுமி அங்கு வந்த மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதைந்து பலியானார்.

இதுகுறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News