செய்திகள்

ஆலங்குடி அருகே பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது

Published On 2019-03-22 20:44 IST   |   Update On 2019-03-22 20:44:00 IST
ஆலங்குடி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள தெற்கு தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 52). மருமகள் சுசீலா (32). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி (58). இவருக்கும் ஆண்டியப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். 

இந்நிலையில் சம்பவதன்று வீரம்மாள் மற்றும் சுசிலா, ரெங்கசாமியின் வீட்டின் அருகே நடந்து சென்றனர். அப்போது இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் (20) ஆகியோர் உருட்டு கட்டையால் வீரம்மாளை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து வீரம்மாள் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News